ஜூலை 1-ஆம் தேதி மாலை மணிக்கு கண்டியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்ட நிகழ்வாக அமைந்தது. |
நிகழ்ச்சி நிரல் |
செல்வி .பிரேமா தலைமையில் நிகழ்வு துவங்கியது . |
கெம்மாரம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் திரு.முருகேஷ் நூலக புத்தகங்களை அரும்புகள் மன்ற நிர்வாகிகள் வசம் அளித்து "வாசகர் வட்டம் " தொடங்கி வைத்தார் . |
கண்டியூர் அரசு பகுதி நேர நூலகத்தின் நூலகர் திரு.செல்வராஜ் புத்தகங்களை வழங்குகிறார். |
கோவையிலிருந்து வந்த சமூக சேவகர் திரு.முரளி மனோகரன் குழந்தைகளை பாராட்டி சில அறிவியல் செயல்பாடுகளை செய்து காண்பித்தார். குழந்தைகள் மகிழ்வுடன் பங்கெடுத்தனர். |
செல்வி.சுகாசினி மற்றும் செல்வி.ஸ்ரீதேவி வரவேற்று பாடல் பாடினார். |
அரும்புகள் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.ரெங்கசாமி நன்றி தெரிவித்து பேசினார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக