அரும்புகள் மன்றத்தில் புதியதாக சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு "குழந்தை உரிமை" குறித்து ஒரு நாள் பயிற்சி சாலைவேம்பு கிராமத்தில் (காரமடை)
26-3-2011 அன்று நடைபெற்றது. ஏழு கிராமங்களிலிருந்து 40 குழந்தைகள் கலந்து கொண்டனர். CSED தொண்டு நிறுவனத்தின் கள பணியாளர்கள் திரு.ஆறுசாமி மற்றும் திருமதி.ராதாமணி அவர்களும் இப்பயிற்சி முகாமினை எளிதமைத்து கொடுத்தனர்.
அரும்புகள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரெங்கசாமி மிக சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார். அடையாளம் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு.வெ.தண்டபாணி இப்பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார்.
பயிற்சி முகாமி ற்கான செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவிய நண்பர்களுக்கு நன்றிகள்.
பயிற்சியாளர்களை அனுப்பி உதவிய CSED நிறுவனத்திற்கும் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக